வாய்ப்புக்காக ரூமுக்கு அழைத்தார் அந்த இயக்குனர்.. உண்மையை போட்டு உடைத்த வித்யா பாலன்..

Actress Vidya Balan: சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகை வித்யா பாலன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். பெங்காலி மொழியில் வெளியான பலோ தேகோ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வித்யா பாலன்.

தமிழில் ரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மேலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வித்யா பாலன் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

30 வருடத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டார் முதல் விஜயகாந்த் வரை எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார்கள் தெரியுமா.?

இவ்வாறு பிசியாக திரைப்படங்களில் நடித்து வரும் வித்யா பாலன் சமீபத்தில் பேட்டி ஒன்று அழைத்தார். அதில் என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர் அந்த படத்தின் இயக்குனர் விளம்பர படப்பிடிப்புக்காக சென்னை வந்தபோது நான் காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசலாம் என்றேன் ஆனால் அவர் ஹோட்டல் அறைக்கு போய் பேசுவோம் என்றார்.

ஹோட்டல் அறைக்கு வரும்படி என்னை கட்டாயப்படுத்தினார் அவரது எண்ணம் புரிந்தது எனவே ஹோட்டல் அறைக்கு சென்று  கதவை மூடாமல் திறந்து வைத்துக் கொண்டே அவரிடம் பேசினேன் நான் கதவை மூடுவேனா என்று பார்த்தார் ஆனால் கடைசிவரை மூடாமல் இருந்தேன்.

ஜோதிகாவால் தான் விக்ரமை திருமணத்திற்கு கூட கூப்பிடவில்லையா சூர்யா..? பல வருடம் கழித்து வெளியான ரகசியம்..

நான் கதவை மூடாமல் இருந்ததால் ஒத்துழைக்க மாட்டேன் என்று புரிந்து அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். அவரது படத்தில் இருந்தும் என்னை நீக்கி விட்டார் என தெரிவித்துள்ளார் வித்யா பாலன். இவ்வாறு சினிமாவில் நடிக்க ஆசைப்படும் இளம் பெண்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவருக்கும் இந்த நிலைமைதான்.