தமன்னாவுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.! கிளாமர் குறித்து பற்ற வைத்த விசித்ரா…

Vichithra: ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை விசித்ரா தனது கவர்ச்சி வேடங்கள் குறித்து சமீபத்தில் பேசியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்தவர் தான் நடிகை விசித்ரா.

கவர்ச்சியான கதாபாத்திரத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவருக்கு தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பதற்கான பட வாய்ப்புகள் குவிந்தது. இவ்வாறு பல படங்களில் நடித்து வந்த விசித்திரா ஒரு கட்டத்தில் தொலைக்காட்சியின் மூலம் சினிமாவிலிருந்து இவருடைய கேரக்டர் திரும்பியது. அந்த வகையில் தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றிருக்கும் நிலையில் இதற்கிடையில் விசித்திரா தனது கவர்ச்சி வேடங்கள் குறித்து பேசிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

விசித்திரா கூறியதாவது, என்ன செய்கிறேன் என்று தெரியாமல் தனது முதல் படத்திலேயே கிளாமராக நடித்தேன். நான் சொன்னதை செய்து கொண்டிருந்தேன் கதாபாத்திரம் பற்றி எதுவும் தெரியாது, என்னை விட 15 வயது மூத்த கேரக்டரில் நடித்தேன். அப்பொழுது நான் முதிர்ச்சியடையாமல் இருந்தேன்.

அப்படி இருந்திருந்தால் இந்த கேரக்டர் செய்திருக்க மாட்டேன் அதன் மூலம் எனக்கு வழக்கமான கிளாமர் வேடங்கள் கிடைத்தது. அதுதான் என்னுடைய அமைப்பு, உயரம், எடை மற்றும் உருவம் இருந்தது இதனை திரைவுலகம் பயன்படுத்திக் கொண்டது. வரவே மாயம் படத்தில் ஸ்ரீபிரியாவின் கேரக்டர் போல் இருக்கிறது என்று என்னிடம் கூறப்பட்டது. ஆனால் இது வித்தியாசமாக எடுக்கப்பட்டது ஏன் கவர்ச்சியான வேடங்களில் நடிக்கிறீர்கள் என கேட்டார்கள்.

தமன்னா செய்தது நடனம், வெப் சீரியல் என சொல்கிறார்கள். அவர் செய்தது கிளாமராக இல்லையா? பிறகு ஏன் என்னை மட்டும் கேட்கிறீர்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இடங்களில் நடிக்கிறார்கள். பிறகு ஏன் என்னை மட்டும் முத்திரை குத்துகிறார்கள் என்று கேட்க வேண்டும் அது என்னுடையது உணர்வுபூர்வமான நடிப்பு நான் அதில் நன்றாக இருந்தேன் அதனால் எனக்கு பாத்திரங்கள் கிடைத்தனர்.

இன்றைய தலைமுறை அப்படி இல்லை எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார்கள விசித்ரா பாடுவாரா? நடிக்கிறாரா? என்கின்றனர். தமன்னாவின் தீவிர ரசிகர்களுக்கு எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ள முடியும் ஏன் இப்படி செய்கிறார் என்று கேட்பார்களா அதற்கு தைரியம் வேண்டும் நடிகைகளும் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட தைரியம் வேண்டும் என்று கூறியுள்ளார்.