ரம்யா கிருஷ்ணனுக்கு பிறகு இவர்தான் அடுத்த நீலாம்பரி.! புகழின் உச்சத்திற்கு சென்ற பிரபல நடிகை..

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தும் கிடைக்காத பிரபலம் பிறகு வில்லியாக நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றவர்கள் சிலர் மட்டுமே அந்த வகையில் தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த வில்லத்தனத்தை பயன்படுத்தி பட்டுத்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் ரம்யா கிருஷ்ணன்.

இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரியாக நடித்து தன்னுடைய சிறந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார். தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தார். இதன் பிறகு தான் தொடர்ந்து அனைத்து படங்களிலும் வில்லிகளையும் பயன்படுத்த தொடங்கினார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு பிறகு சொல்லும் அளவிற்கு எந்த ஒரு முன்னணி நடிகையும் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது வாரிசு நடிகையாக அறிமுகமாகி வில்லத்தனத்தில் மிரட்டி வருகிறார் எனவே அடுத்த நீலாம்பரி இவர் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சரத்குமாரின் மூத்த மகள் தான் வரலட்சுமி, இவர் 2012ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படத்தினை தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்தியா உள்ளிட்ட அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவ்வாறு இவர் நடித்த திரைப்படங்களில் இவருடைய நடிப்புகள் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை எனவே இவருக்கு பெரிதளவில் மார்க்கெட் இல்லாமல் போனது. எனவே இந்த நேரத்தில் தான் நடிகை வரலட்சுமி வில்லியாக நடிக்க தொடங்கினார் அந்த வகையில் சண்டைக்கோழி 2, சர்க்கார், மாரி 2, யசோதா போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றினை தந்தது.

இவ்வாறு தமிழனை விடவும் தெலுங்கில் அதிக மார்க்கெட் உடன் இருந்து வரும் வரலட்சுமி தற்பொழுது கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாக நடித்து வருகிறார். தற்பொழுது நடிகை வரலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற கிட்டத்தட்ட ஐந்து மொழி திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Leave a Comment