தம்மு, சுருட்டு என புகையை ஊதித் தள்ளும் வனிதா.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்

நடிகை வனிதா விஜயகுமார் புகைபிடிப்பது போன்று போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமான வனிதா தொடர்ந்து சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் எந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பிரபலத்தை தராத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார்.

இதனை அடுத்து ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான வனிதா நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்த இவர் தற்பொழுது சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்று வரும் நிலையில் அதே போல் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடிகை வனிதா விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் இதனை அடுத்து மாணிக்கம் படத்திலும் நடித்தார். ஆனால் தொடர்ந்து பல சர்ச்சைகளில் வாழ்ந்து வந்ததனால் விஜயகுமார் இவரை தனது குடும்பத்தில் இருந்து நீக்கினார்.

vanitha
vanitha

எனவே எந்த ஒரு உதவியும் இல்லாமல் வாழ்ந்து வந்த நிலையில் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதனை அடுத்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் இதிலும் பல சர்ச்சைகள் எழுந்ததால் மூன்றாவது கணவரையும் விவாகரத்து செய்தார். இதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் வாழ்ந்து வரும் வனிதா விஜயகுமார் தொடர்ந்து தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தம்மு, சுருட்டு போன்றவற்றை குடிப்பது போல போலீஸ் அதிகாரியாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment