பீட்டர் பால் மரணம் குறித்து நடிகை வனிதா போட்ட உருக்கமான பதிவு.? சோகத்தில் ரசிகர்கள்

நடிகை வனிதா விஜயகுமார் முதலில் சந்திரலேகா என்னும் படத்தில் நடித்தது அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து மாணிக்கம் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் 2007 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துப்பெற்றது பிரிந்தனர்.

அதன் பிறகு வனிதா 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2012 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பீட்டர் பாலு என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அவரையும் சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார் வனிதா.

இப்பொழுது தனது மகளுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.  இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு சின்னத்திரை, வெள்ளி திரையில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் நடிகை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இந்த தகவல் பெரிய அளவில் வைரவான நிலையில் வனிதா..

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தற்போது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் சொன்னது.. என் அம்மா ஒரு விஷயத்தை சொல்வார், நீயே உனக்கு உதவினால்  தான் கடவுளும் உனக்கு உதவுவார் இந்த பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நேரங்களில் எல்லோரும் அவரவர் பாதையை தேர்வு செய்கிறார்கள்.

நீங்கள் சந்தித்த துயரங்களுடன் போராடி தற்பொழுது அமைதியை அடைந்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன் நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில் நீங்க இப்பொழுது சிறந்த, அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என எனக்கு தெரியும் எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள் என வனிதா கூறி உள்ளார்.

vanitha
vanitha

Leave a Comment