விவாகரத்துக்கு பின் சமந்தாவை பின்தொடரும் நடிகை வனிதா..! இது எங்க போய் முடிய போகுதுன்னு தெரியலையே..?

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் தற்போது இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் ஒரு பெண் ஒரு முடிவு எடுக்கும் பொழுது அவருடைய ஒழுக்கம் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம்தான்.

ஆனால் இதுவே ஒரு ஆண் முடிவு எடுக்கும் பொழுது அதனை ஏன் யாரும் விமர்சிப்பதில்லை என்று கேள்வியை ஏழுப்பியதுமட்டுமல்லாமல்  ஒழுக்கம் இல்லாமல் இருப்பது சமூகம் தான் என சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு இந்த பதிவை பார்த்து நடிகை வனிதா இங்கு சமூகம் என்று எதுவுமே கிடையாது. உன்னுடைய வாழ்க்கையை நீதான் சிறப்பாக வாழ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக நடிகை சமந்தா தனியாக ஒரு காஸ்டும் கடை ஒன்றை நடத்தி வருவது மட்டுமல்லாமல் பல தொழில்களில் கோடிக்கணக்கான முதலீடு செய்துள்ளார். இதனால் தான் தன்னுடைய விவாகரத்தின் போது கூட ஜீவனாம்சம் எனக்கு தேவை கிடையாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சமந்தாவை தொடர்ந்து நடிகை வனிதாவும் ஒரு காஸ்ட்யூம் கடையை திறந்து உள்ளார் இவ்வாறு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த கடை திறக்கப்பட்டது மட்டுமில்லாமல் வனிதா மற்றும் அவருடைய அம்மா மஞ்சுளா விஜயகுமார் அணிவது போல் உள்ளாடைகள் இந்த கடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

vanitha-2
vanitha-2

அதுமட்டுமல்லாமல் தீபாவளி முடியும் வரை நான் இந்த கடையில் தான் இருப்பேன் என்று கூறியது மட்டுமல்லாமல் அனைவரும் வாருங்கள் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தா மற்றும் வனிதா போன்ற நடிகைகள் தனியாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டாலும் முன்னேறி வருகிறார்கள்  இது ஒரு பாராட்டக் கூடிய விஷயமாக அமைந்துள்ளது.

Leave a Comment