ரஜினியை தரக்குறைவாக பேசிவிட்டு தலைமறைவான வடிவுக்கரசி..! இணயத்தில் பூகம்பம்போல் வெடித்த உண்மை..!

actress vadivukarasi latest news: தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் அக்கா கதாபாத்திரம் என தொடர்ந்து நடித்து பல்வேறு வெற்றிகளை பெற்றவர் தான் வடிவுகரசி இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் பெயரையும் புகழையும் சம்பாதித்தார் இவருடைய நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.

தற்போது தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமான குணச்சித்திர நடிகர்களில் இவரும் ஒருவர் இவர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அருணாச்சலம் என்ற திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதாவது இந்த திரைப்படத்தில் வடிவுகரசி வேதவல்லி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் இவருடைய வெறித்தனமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார். அப்போது இந்த திரைப்படத்தில் ரஜினியை பார்த்து அனாதை பயலே என வடிவுகரசி திட்டும்போது அதை பார்த்து ரஜினியே மிரண்டு போய் விட்டாராம்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனங்கள் அனைத்துமே மெகா ஹிட் கிடைத்துவிட்டது.

இந்நிலையில் வடிவுகரசி ரயிலில் பயணம் சென்று கொண்டிருக்கும் பொழுது ரஜினியின் ரசிகர் ஒருவர் திடீரென ரயிலின் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து விட்டாராம் பின்னர் ரயிலை நிப்பாட்டி என்ன என விசாரித்த பொழுது வடிவுகரசியிடம் என்னுடைய தலைவனைப் பார்த்து அனாதை என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என கூரியிருந்தார்.

அதன்பிறகு வடிவுகரசி அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சுமார் முப்பது நாட்களாக யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக இருந்தாராம். இதை வடிவுகரசி சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

rajini
rajini
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment