“தி லெஜண்ட்” படத்தில் நடித்ததற்காக நடிகை ஊர்வசி ரவுத்தேலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்.!

சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் அவர்கள் தனது கடை விளம்பரத்திற்காக மட்டுமே நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசையும் அவருக்கு வந்தது அதன்படி பல கதைகளை கேட்டு வந்த அவருக்கு ஜேடி – ஜெர்ரி சொன்ன கதை ரொம்ப பிடித்துப் போக அந்த கதையில் சரவணன் அருள் நடிக்க முடிவெடுத்தார்.

அந்த வகையில் 200 கோடி பட்ஜெட்டில் தி லெஜண்ட் என்ற பெயரில் படம் உருவானது இந்த படம் பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து ஒரு வழியாக நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகியது. தமிழ்நாட்டையும் தாண்டி நான்கு  மொழிகளிலும் இந்த படம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சரவணன் அருளுடன் கைகோர்த்து ஊர்வசி ரவுத்தேலா, மயில்சாமி, யோகி பாபு, விவேக், நாசர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து அசத்தினர். படம் தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக..

இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில்  முதல் நாளில் தி லெஜன்ட் திரைப்படம்   தமிழகத்தில் மட்டும் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. வருகின்ற நாட்களில் நிச்சயம் நல்லதொரு வசூலை அள்ளும் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தி லெஜன்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு சுமார் 20 கோடி சம்பளம் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளி வருகின்றன.

Leave a Comment