பல வருடம் கழித்து கருத்த நடிகருடன் களமிறங்கும் நடிகை த்ரிஷா..! காரணத்தை கேட்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை திரிஷா இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய மார்க்கெட் குறைய குறைய கவர்ச்சி கதாபாத்திரத்திற்கு டாட்டா காட்டிய நமது நடிகை சமீபத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இது தொடர்ந்த சமீபத்தில் கர்ஜனை மற்றும் பரமபதம் விளையாட்டு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் இத்திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைய போகும் நிலையில் தற்போது ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாக இருக்கும் வகையில் தற்போது திரிஷா தன்னுடைய பழைய நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த சமர் எனும் திரைப்படத்தில் நடிகை திரிஷா விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார்.

ஆனால் இந்த திரைப்படமானது சரியான வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வியை கொடுத்து விட்டது. இதனை தொடர்ந்து நடிகை திரிஷா அதன் பிறகு விஷால் திரைப்படத்தில் நடிப்பதை விட்டு விட்டார் ஆனால் தற்போது நடிகை திரிஷா விஷாலுடன் மறுபடியும் ஜோடி சேர உள்ளாராம்.

இதற்கு முக்கிய காரணமே செல்லப்பிராணி நாய் தானாம்.  ஏனெனில் திரிஷாவுக்கு நாய்கள் என்றால் மிகவும் ரொம்ப பிடிக்குமாம். அதுமட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் நாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க இருப்பதினால் இந்த திரைப்படத்தின் கதையை கூட சரியாக கேட்காமல் நடிகை திரிஷா ஒப்புக் கொண்டுள்ளாராம்.

vishaal
vishaal

Leave a Comment