ரசிகரின் மோசமான பதிவிற்கு தரமான பதிலடி கொடுத்த நடிகை டாப்சி..! இனிமே வாய் பேசுவிங்க யாரவுது..?

actress tapsee latest answering for fans comment: சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் நடிகை டாப்ஸியும் முன்னிலை வகிக்கிறார்.  இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமானார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தமிழ் சினிமாவில் தனது வளர்ச்சிக்கு தடையாக பலர் இருந்தார்கள் எனவும் தன்னை வளர விடாமல் தடுத்தார்கள் எனவும் அவர் கூரியிருந்தார்.

இவ்வாறு தைரியமாக பல செயல்களைச் செய்த நடிகை டாப்சி சமீபத்தில் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து சமூக வலைத்தளத்தில் பேசியது மட்டும் அல்லாமல் போதைப்பொருள் விவகாரத்தைப் பற்றியும் பேசியிருந்தார் இவ்வாறு இவர் வெளியிட்ட கருத்தின் மூலமாக பல பிரபலங்களுடன் விவாதம் ஏற்பட்டது.

இவ்வாறு தைரியமாக சினிமா வட்டாரத்தில் வலம் வரும் நடிகை டாப்ஸியை பார்த்து நீங்கள் ஒரு தகுதியற்ற நடிகை என்று ரசிகர் ஒருவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதைப்பார்த்த நடிகை டாப்ஸி நான் எதை உயர்த்த வேண்டும்?  என அவருக்கு கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல் நான் உயர்த்த வேண்டிய ஒரே விஷயம் உங்கள் கண்ணுக்குத் தெரியாத தரத்தை மட்டும் தான் என மூஞ்சில அடித்தபடி பதிலளித்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் தன் வெளியிடும் புகைப்படத்திற்கு வரும் கமெண்ட்களை பார்த்துவிட்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருப்பார்கள் ஆனால் டாப்ஸி அதுபோன்ற கிடையாது பதிலுக்கு பதில் பேசி விடுவார்.  இதனால் அவருடைய தைரியத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

tapsee
tapsee

Leave a Comment