சிங்கப்பூரில் அரைகுறை உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தமன்னா.! வைரல் புகைப்படம்..

நடிகை தமன்னா சமீபத்தில் சிங்கப்பூர் சுற்றுலா சென்றிருக்கும் நிலையில் அங்கு நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா 2006ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தினை தொடர்ந்து விஜய்யின் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், தனுஷ் உடன் படிக்காதவன், விக்ரமுடன் ஸ்கெட்ச், விஷாலுடன் ஆக்சன், ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என அடுத்தடுத்த பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக வளம் வந்தார்.

இவ்வாறு தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நடிகை தமன்னா தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த வருகிறார். மேலும் இதனை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

thamannah 1

இவ்வாறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை தமன்னா தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

thamannah

அந்த வகையில் சமீபத்தில் நடிகை தமன்னா சிங்கப்பூரில் உள்ள சென்டோசோ என்ற தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் அங்கு நீச்சல் குளத்தில் நீச்சல் உடை அணிந்து கொண்டு மிதக்குவது போன்ற பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

Leave a Comment

Exit mobile version