பிரபல நடிகருக்கு பவுன்சராக பணியாற்ற ஆசை இருப்பதாக கூறிய நடிகை தமன்னா.!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கி வரும் ஹிருத்திக் ரோஷனுக்கு பிரபல தமிழ் நடிகை ஒருவர் பவுன்சராக பணியாற்ற விரும்ப வருவதாக கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலம்டைந்தவர் தான் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மேலும் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு பவுசராக பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார். தமன்னா தமிழில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் ஹிந்தியில் தயாராகி வரும் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் மதூர் பண்டார்கர் இயக்கியுள்ளார் மேலும் இதுவரையிலும் இல்லாத வித்தியாசமான பெண் பவுன்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தமன்னா. இந்த படம் பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்ட ஒரு பெண் சூழ்நிலை காரணமாக பவுன்சராக மாறுவதையும் அதன் பிறகு சந்திக்கும் சில சுவாரசியமான பிரச்சனைகளையும் மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இந்த படம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தமன்னா அவ்வபொழுது பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் நிஜத்தில் நீங்கள் பவுன்சராக ஒருவர் பணியாற்ற வேண்டும் என்றால் யாருக்கு பவுசராக பணியாற்றியவர்கள் என கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த தமன்னா கொஞ்சம் கூட யோசிக்காமல் ஹிருத்திக் ரோஷனுக்கு பவுன்சராக பணியாற்ற ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.

Leave a Comment