விஜய் சேதுபதியை தொடர்ந்து தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமாக உள்ள பிரபல நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் தங்களது மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் போன்றவற்றை ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சமீப காலங்களாக டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் தொலைக்காட்சி தான் சன் டிவி. பொதுவாக சன் டிவி சீரியலுக்கு என்றே ஒரு பெயர் போன தொலைக்காட்சி  என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பொதுவாக முன்பெல்லாம் சினிமாவில் மார்க்கெட்டை இழந்த நடிகர்,நடிகைகள் வைத்து தான் சன் டிவியில் பல சீரியல்களை  ஒளிபரப்பாகி  வந்தார்கள்.

சன் டிவியை மட்டும் குறிப்பாக சொல்ல முடியாது மற்ற தொலைக்காட்சிகளிலும் பலர் நடித்து வந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தொலைக்காட்சிகள் தங்களது மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்பதற்காக வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்,நடிகைகளாக ஜொலித்து வரும் பலரையும் பலகோடி சம்பளத்திற்கு தங்களது தொலைக்காட்சிகளில் பணி புரிய வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் கமலஹாசன்,சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது சன் டிவி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஓவர் டேக் செய்ய வேண்டும் என்பதற்காக சன் டிவியும் புதிதாக ஒரு சமையல் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.அதில் விஜய் சேதுபதிதான் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு  மாஸ்டர் செப் என்ற பெயர் வைத்துள்ளார்கள்.

tamannaa
tamannaa

இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் நான் ஈ சுதிப்பும் என்ற பெயரில் ஒளிபரப்பாகவுள்ளது.இந்நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்க உள்ளார்.இதுவரையிலும் தமன்னா சின்னத்திரையில் பணியாற்றியது இல்லை இதுதான் இவர் தொகுப்பாளராக பணியாற்றும் முதல் நிகழ்ச்சியாகும். எனவே ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment