டைட்டான டிரஸை போட்டுக் கொண்டு தனது திமிரும் அழகை காட்டிய சுருதிகாசன். புகைப்படத்தை பார்த்து அசந்துபோன ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது அனைத்து மொழிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். அவர் அப்பாவை போல இவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். போதாத குறைக்கு நடிப்பையும் தாண்டி பாட்டு பாடுவது, நடனம் ஆடுவதிலும் செம கெட்டிக்காரப் பெண்ணாக சுருதிஹாசன் இருக்கிறார்.

இதனால் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக விஸ்வரூபம் எடுத்து உள்ளார் ஸ்ருதி ஹாசன். என்ன தான் இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் சமீபகாலமாக தமிழில் பெரிய அளவு நடிக்காமல் மற்ற மொழிகளில் அதிகம் ஆர்வம் காட்டினார்.  தெலுங்கில் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து வெற்றியை கொடுத்து வந்த நிலையில் பல மாதங்கள் கழித்து தமிழில் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து லாபம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார்.

இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் சொல்லி கொள்ளும் அளவிற்கு கிடைக்காததால் மீண்டும் தமிழில் பெரிய அளவிலான படங்களை அவர் கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.இப்படி இருந்தாலும் பிற மொழிகளில் குறிப்பாக பிரசாந்த் நீல் இயக்கும் திரைப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலும் பல்வேறு விருது விழா மற்றும் படங்களில் கமிட்டாகி அசத்துகிறார் அதுவும் விருது விழாவில் சொல்லவே தேவையில்லை தாறுமாறான உடையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இன்ஸ்டான் பக்கத்தில் தம்மாத்துண்டு டிரெஸ்களை போட்டுக்கொண்டு போட்டோ ஷூட் என்ற பெயரில் புகைப்படத்தை அள்ளி வீசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல விருது விழா ஒன்றில் நடிகை சுருதிஹாசன் மகாராணி போல் உடை அணிந்து வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் பற்றி எரிகிறது. ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளாக அந்த புகைப்படம் மாறி உள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment