பல்வேறு மன கஷ்டத்திற்கு பிறகும் தென்னிந்திய அளவில் நடிகை சமந்தாவிற்கு கிடைத்த கௌரவம்..!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவர் பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு பிரபல நடிகைகள் திரைப்படத்தில் நடிப்பதை தவிர்ப்பது மட்டுமல்லாமல் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்க முற்றிலுமாக தவிர்த்து விடுவார்கள் ஆனால் நடிகை சமந்தா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தான் அதிகமாக திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் கவர்ச்சியிலும் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.

ஆனால் இதுவே இவருடைய வாழ்க்கையில் விளையாடியது போல  சமந்தா மற்றும் நாகர்ஜுனா விற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு  தற்போது விவாகரத்தில் வந்து முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் நடிகை சமந்தா ஆன்மீக சுற்றுலா மற்றும் வெளிநாடு பயணம் என தன்னுடைய மன நிம்மதிக்காக சென்று வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்சமயம் நடிகை சமந்தா தன்னுடைய சினிமா உலகிற்கு  சிறிது இடைவெளி விட போவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியது ஆனால் தற்போது அவருடைய பட வாய்ப்பை பார்த்தாள் அந்த வார்த்தைக்கு இடம் கொடுக்க முடியாது போல இருக்கிறது அந்த வகையில் டாப்சி புதிதாக தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தில் சமந்தா ஒருத்திரைபடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா நடிப்பில் உருவான சகுந்தலம் மற்றும் காத்து வாக்குல 2 காதல் ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு காத்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் கோவாவில் வரும் 20ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை ஒரு சர்வதேச திரைப்பட விழா ஒன்று நடைபெற உள்ளது இந்த விழாவில் நடிகை சமந்தா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் கோவாவில் நடக்கும் திரைப்பட திருவிழாவில் முதன்முதலாக கலந்து கொள்ள போகும் தென்னிந்திய நடிகை என்றால் அது சமந்தா என்ற பெயர் இவருடைய மரியாதையை உயர்த்தி உள்ளது.

samantha-1
samantha-1

Leave a Comment