தற்பொழுது ஸ்ரீதிவ்யா எப்படி உள்ளார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்.

பொதுவாக நடிகைகள் என்றாலே நடிப்பு திறமை மற்றும் அழகு இரண்டும் முக்கியம் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.  அந்த வகையில் தனது அழகினாலும்,நடிப்புத் திறமையினாலும் எளிதில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

இவர் சங்கிலி புங்கிலி,வெள்ளைக்கார துரை,ஈட்டி,ஜீவா, காக்கிச்சட்டை,மருது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட இன்னும் ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளத்திலும் என பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒருகாலத்தில் சினிமாவில் கலக்கி வந்த இவர் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மிகவும் தல்லாட்டி வருகிறார்.

இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததுக்கு முக்கிய காரணம் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும்  குடும்ப  நடித்ததனால் தான். பொதுவாக நடிகைகள் என்றால் அழகு மற்றும் நடிப்புத் திறமையை தாண்டி கவர்ச்சி என்ற ஒன்று மிகவும் முக்கியம்.

கவர்ச்சியில் ஸ்ரீதிவ்யாவுக்கு பெரியதாக நாட்டம் இல்லாத காரணத்தினால் தற்பொழுது பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். அதோடு கவர்ச்சியாகத் தான் நடிக்க வேண்டுமென்றால் நான் திரைப்படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீதிவ்யா தனது இன்ஸ்டாகிராமில் மேக்கப் இல்லாமல் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment