பட வாய்ப்புகள் இல்லாததால் கிராமத்தில் செட்டிலான நடிகை ஸ்ரீதிவ்யா.! நீண்ட இடைவெளிக்குப் பிறகு வைரல் புகைப்படம்..

சினிமாவில் தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விலகியவர்கள் பலர் இருக்கின்றனர் அந்த வகையில் தொடர்ந்து படங்களில் நடித்த வந்து தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு மொத்தமாக விலகி இருப்பவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா.

சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் கிராமத்தில் தங்கியிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிட்டிருக்கும் நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் ஸ்ரீதிவ்யாவுக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படம் சூப்பர் ஹிட் பெற்ற நிலையில் இதனை தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை படத்தில் நடித்திருந்தார். பிறகு விஷாலுடன் மருது, ஈட்டி, ஜன கன மன, பென்சில், வெள்ளைக்காரத்துரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு மொத்தமாக விலகினார்.

sri divya

இப்படிப்பட்ட நிலையில் மலையாளத்தில் ஒரு படத்தில் மட்டுமே நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருந்தார். இவ்வாறு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் இருந்து வந்தாலும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததற்கு முக்கிய காரணம் இவர் அதிக அளவில் கவர்ச்சி காட்டாதது தான் என கூறப்படுகிறது.

sri divya

ஸ்ரீதிவ்யா பெரும்பாலும் கவர்ச்சியில் ஆர்வம் செலுத்தாமல் இருந்து வருவதனால் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் கிராமத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

sri divya 1

Leave a Comment

Exit mobile version