46 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் சித்தரா.! அவர் சொல்லும் காரணம் இதுதான்.

actress sithara still she does not married: 1989 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் புது புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தரா. இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இவர் தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு அப்படித்தான் நடிகை சித்தராவுக்கும் தமிழ் சினிமாவில் அமோக வரவேற்பு கொடுத்தது. இவர் நடித்த புது புது அர்த்தங்கள் ஹிட்டானதால் அதனைத் தொடர்ந்து உன்னை சொல்லி குற்றமில்லை,புதுப்புது ராகங்கள், புது வசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல் என பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டார்.

இதனைத்தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு படையப்பா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், 46 வயதாகும் சித்தரா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற காரணத்தை அவரே கூறியுள்ளார் அதை அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அவர் வாழ்க்கையில் முக்கியமான நபராக நம்பியிருந்தார் தன்னுடைய தந்தையை தான். அவரை இழந்ததால் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார், இது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது கூட அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment