ஒரு நேரத்தில் தனது இடுப்பழகால் தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்த நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா..?

தமிழ் சினிமாவில் விஐபி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சிம்ரன். இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜயின் ஒன்ஸ்மோர் திரைப் படத்திலும் நடித்திருந்தார்.

இவ்வாறு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியதன் மூலமாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரன் விஜய் அஜித் சூர்யா என பலரின் திரைப்படத்திலும் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

பொதுவாக ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு சிறப்பு அம்சம் உண்டு அந்த வகையில் நடிகை சிம்ரனுக்கு சிறப்பு அம்சம் என்றால் அவருடைய இடுப்பு நடனம் தான் இவ்வாறு தன்னுடைய இடுப்பழகை காட்டி ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் கனவுக்கன்னியாக வலம் வந்துள்ளார்.

மேலும் நமது நடிகை தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இதுவரை சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தில் மட்டும் நடிக்க முடியாமல் இருந்ததாகவும் அதற்காக தற்போது வரை காத்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.

அவருடைய நெடுங்கால தவத்திற்கு விடை கிடைத்தது போல பேட்டை திரைப்படத்தில்  ரஜினியுடன் நடிப்பதற்கான வாய்ப்பு சிம்ரனுக்கு கிடைத்தது. இது ஒரு பக்கமிருக்க நடிகை சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்ற சிறு வயது நபரை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு இரண்டு மகன்களை பெற்றெடுத்தார் நடிகை சிம்ரன் தன்னுடைய மகன்கள் உடன் இருக்கும் புகைப்படம் சில சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகான்கள் நமது கனவுகன்னிக்கு என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

simran son-1
simran son-1

Leave a Comment