துள்ளுவதோ இளமை இரண்டாம் பாகத்திலும் ஷெரினா!! அவரே வெளியிட்ட தகவல்!

actress sherin wants to act in Tholluvatha illamai part 2:கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தனுஷ் மற்றும் ஷெரின். மேலும் இந்த திரைப்படத்தில் பள்ளிப்பருவத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் காதலை பற்றி கூறப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் மூலம் இவர்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. துள்ளுவதோ இளமை படம் வெளியாகி இன்றுடன் பதினெட்டு ஆண்டுகளை கடந்து விட்டது என கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து  தனுஷ் மற்றும் ஷெரின் இருவருமே  திரையுலகில் வலம் வர தொடங்கினார். தனுஷ் அன்று முதல் இன்று வரை கடந்த 18 வருடங்களாக பல வெற்றி, தோல்விகளை சந்தித்து இன்றளவும் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் ஷெரின் சில படங்கள் நடித்து விட்டு பின்பு காணாமல் போய்விட்டார். எனினும் கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே  முடங்கியுள்ள செரின் அவர்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஷெரின் துள்ளுவதோ இளமை இரண்டாம் பாகம் உருவானால் அதில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment