தனது கணவரின் படத்தை பார்ப்பதற்கு திரையரங்கு வரை சென்று விட்டு பின்பு திரும்பி வந்த நடிகை ஷாலினி.? எதற்காக தெரியுமா.?

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த சில வருடங்களாக உருவாகி வந்த திரைப்படம் தான் வலிமை அஜித் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது இந்த திரைப்படம் சர்க்கார் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முதலிடத்தில் இருக்கிறது.

வலிமை படம் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து நேற்று வெளியானதால் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அதிகமாகிவிட்டது எங்கு பார்த்தாலும் அஜித்தின் ரசிகர்கள் பேனர்கள்,போஸ்டர்கள் போன்றவற்றை செய்து மாஸ் காட்டினார்கள்.

வலிமை படத்தை பார்ப்பதற்காக முதல் நாள் முதல் ஷோ வில் பல பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு வந்தார்கள் அதேபோலத் தான் தனது கணவர் நடித்த வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்காக நடிகை ஷாலினியும் திரையரங்கிற்கு சென்று உள்ளார் ஆனால் அங்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்த நடிகை ஷாலினி ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியேறி விட்டாராம்.

இப்படி இருக்கும் நிலைமையில் நான் எப்படி திரையரங்கில் சென்று படம் பார்ப்பது என திரையரங்கை விட்டு கிளம்பி வந்துவிட்டாராம்.அங்கு ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் படத்தை பார்க்காமல் ஷாலினி வீட்டிற்கு திரும்பியதாக ஒரு தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

valimai

மேலும் இந்த தகவலை அறிந்த பல ரசிகர்களும் நடிகை ஷாலினி திரையரங்கிற்கு வந்தால் அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என ஒரு சில ரசிகர்கள் ஆசை படுவார்கள் அதற்காகத்தான் ஷாலினி கூட்டம் அதிகமாக இருப்பதால் கிளம்பி சென்றுவிட்டார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version