அமர்க்களம் படத்தை முதலில் நிராகரித்த நடிகை ஷாலினி – விடாமல் துரத்திய இயக்குனர் சரண்.! என்ன காரணம் தெரியுமா.?

சினிமாவுலகில் நடிகர், நடிகைகள் படங்களில் நடிக்கும் போது காதல் வயப்படுவது உண்டு அந்த காதல் ஒருகட்டத்தில் திருமணத்தில் முடியும் திருமணம் செய்துகொண்டு பிறகு சின்ன சின்ன பிரச்சனைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிறப்பாக இருந்தாலே போதும்.

அந்த ஜோடி அழகாக சினிமாவையும், வாழ்க்கையும் சிறப்பாக செயல் படுவார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடியாக பார்க்கப்படுவது அஜித்-ஷாலினி தான். இவர்கள் இருவரும் சினிமாவையும், வாழ்க்கையும் சரியாகப் புரிந்துகொண்டு ஓடுவதால் உயர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் அஜித் – ஷாலினி குறித்து சூப்பர் தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது அமர்க்களம் திரைப்படத்தில் போது நடிகை ஷாலினிக்கு கதையை கூறி நடிக்க வைக்க படக்குழுவினர் முதலில் முயற்சி செய்தது ஆனால் அமர்க்களம் படத்தில் நடிக்க முடியாது என நடிகை ஷாலினி தெரிவித்து விட்டாராம் காரணம் அப்பொழுது 12ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது பரீட்சை எழுதுவதற்காக..

இந்த படத்தில் நடிக்க முடியாது போன நிராகரித்தார் ஆனால் இயக்குனர் சரண் காத்திருந்து பின் அஜீத் – ஷாலினி ஆகிய இருவரையும் நடிக்க வைத்தாராம் அமர்க்களம் திரைப்படத்தின் பொழுது இவர்களது காதலும் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் தவறுதலாக ஷாலினி கையை கத்தியால் காயப்படுத்தினர்.

அப்போது ஷாலினி வலியால் துடித்தாரோ இல்லையோ அஜித் ரொம்ப கஷ்டப்பட்டார். உண்மையில் சொல்லப்போனால் காதலை அதன் பின் தான் உணர்ந்து ஷாலினிக்கு காதல் சொல்லி இருவரும் நன்றாக பழகி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment