21 வருடங்கள் கழித்து பிரமாண்ட படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நடிகை ஷாலினி அஜித்.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அப்படி நடிப்பவர்களும்  முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்காமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் திருமணமாகி 21 வருடங்கள் கழித்து அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பிரம்மாண்ட திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.  நடிகை ஷாலினி தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு 1997ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இத்திரைப்படத்தில் நடிகர் தளபதி விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார் மேலும் இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் தற்பொழுது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும் பாடல்களும் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்ததுள்ளது.

இதன் பிறகுதான் அஜித்திற்கு ஜோடியாக அமர்க்களம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தின் மூலம் இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2000ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் தற்போது இவர்களுக்கு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

ஷாலினி கடைசியாக 2001ஆம் ஆண்டு வெளியான பிரியாத வரம் வேண்டும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  பிறகு திருமணமாகி 21 வருடங்கள் கழித்து தற்பொழுது இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னின் செல்வன் பாகம்-1 திரைப்படத்தில் ஷாலினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் ஆச்சரியமுமடைந்து வருகிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்,ஜெயம் ரவி,விக்ரம்,த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து வருகிறார்கள்.

Leave a Comment