திடீரென்று மொட்டையடித்த பிரபல நடிகை அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் சொல்லும் அளவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இல்லை என்றாலும் ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு  இவர் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணி தான்.

இவர் தமிழில் நடித்த ஒரு படம் தான் “ஒரு காதல் செய்வீர்”. கடந்த 2020 ஆம் ஆண்டு சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் உபயோகப்படுத்திய குற்றத்திற்காக மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். அதன் பிறகு தனது வக்கீல் மூலம் ஜாமினில் வெளிவந்து அஜித் பாஷா என்னும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

sanjjana kalrani

அதுமட்டுமில்லாமல் தற்போது 8மாத நிறை கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில்தான் சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைமுடி இல்லாத ஒரு புகைப்படத்தை அதாவது மொட்டை தலையுடன் காட்சி அளிக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதுபற்றி சஞ்சனா கல்ராணி கூறியது “நான் பார்ப்பவரின் கண்களுக்கு அழகாகத் தெரிகிறேன்.

sanjjana kalrani 1

அதனால் நான் என் தலைமுடியை முழுவதுமாக தியாகம் செய்துவிட்டேன்,பல சிரமங்களைக் கடந்து என் வாழ்க்கை மீண்டும் அழகாக இருக்கிறது,எனது வாழ்க்கையின் இந்தக் கட்டத்திற்கு என்னால் போதுமான அளவு கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்,என் குழந்தையை வரவேற்க தயாராகி விட்டேன்” என்று கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் உள்ளனர், மேலும் இப்புகைப்படம் இணையதளத்தில் பேசும் பொருளாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version