நடிமை சமந்தாவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நட்சத்திரமாக கலக்கி  வருகிறார். சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு உதாரணமாக விளங்கி வரும் இவர் திருமணத்திற்குப் பிறகு ஏராளமான நடிகைகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்கள்.

ஆனால் சமந்தா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படத்தில் நடித்து தனது கனவில் சாதித்து வந்தார்.  பிறகு சில கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்தை பெற்றார்.  விவகாரத்திற்கு பிறகு தொடர்ந்து டிப்ரஷன் இருந்து வந்த இவர் தற்போது அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு மீண்டும் தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நடிப்பில் கடைசியாக இவரின் பிறந்த நாளன்று காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்களால் பாராட்டப்பட்டு இருந்தாலும்,கிளாமராக நடித்து மற்றும் டபுள் மீனிங் வசனம் போன்றவை ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து குடும்ப பாங்காக நடித்து வந்தவர் தற்போதெல்லாம் கவர்ச்சியிலும் களமிறங்கிவிட்டார். இவர் நடிப்பில் விரைவில் ஆச்சாரியா திரைப்படம் வெளியாகவுள்ளது. பிறகு தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆக்டிவாக இருந்து வரும் இவர் திரைப்படங்களில் நடிப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருக்காமல் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்வதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  அந்த வகையில் தற்போது கால்களின் உதவி இல்லாமல் கையால் ஏணி ஏறுகிறார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய்வுள்ளார்கள்.

Leave a Comment