மணிரத்னம் படத்தையே வேண்டாம் என உதறி தள்ளிய நடிகை சமந்தா.. எந்த படத்தை நழுவ விட்டார் தெரியுமா.?

நடிகை சமந்தா நடிப்பில் தற்பொழுது சாகுந்தலம் திரைப்படம் வருகின்ற 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது மேலும் நடிகை சமந்தா தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் இப்படத்தை தொடர்ந்து ஹிந்தியிலும் பிஸியாக வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறாராம்.

நடிகை சமந்தா நடிப்பில் தமிழில் வெளியான பல திரைப்படங்கள் மக்களிடையே ஏக போக வரவேற்பை பெற்றிருக்கும்.அந்த வகையில் பார்த்தால் சமந்தா நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பை தந்தார்கள் இந்நிலையில் நடிகை சமந்தா ஒரு படத்தை வேண்டாம் என ஒதுக்கியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆம் இயக்குனர் மணிரத்னம் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வருகிறார் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தில் கதாநாயகியாக சமந்தாவை தான் நடிக்க வைப்பதாக இருந்ததாம்.ஆனால் இதனை சமந்தா விடம் கூறும் பொழுது இந்த படம் எனக்கு வேண்டாம் என நிராகரித்து விட்டாராம் மேலும் கடல் திரைப்படம் வெளிவந்த பொழுதும் மக்களிடையே ஓரளவு வரவேற்பை மட்டுமே பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த சமந்தாவின் ரசிகர்கள் பலரும் எதற்காக இந்த திரைப்படத்தை வேண்டாம் என நிராகரித்தார் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என கேட்டு வருவது மட்டுமல்லாமல் சமந்தா நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படங்களைப் பற்றி அப்டேட் கொடுங்கள் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் சமந்தா எதற்காக ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார் இவரது சமீபத்து புகைப்படங்களை பார்த்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம் சமந்தாவின் முகமே மாறிவிட்டது என்று கூறி சாகுந்தலம் திரைப்படத்தை பார்ப்பதற்கு நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கிறோம் எனவும் கூறி வருகிறார்கள்.

kadal
kadal

Leave a Comment