மீண்டும் மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் சமந்தா.! புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பிறகு அந்த நோயிலிருந்து வெளிவருவதற்காக மருத்துவரின் ஆலோசனையின் படி சிகிச்சைகளும் உடற்பயிற்சிகளும் மேற்கொண்டு வந்தார். அது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் சமந்தா அதிலிருந்து மீண்டு உடல் நலம் தேறி கொண்டிருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் இதனை அடுத்து கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காமல் சாகுந்தலம் பட ப்ரோமோஷன் மற்றும் குஷி, சித்தாடல் ஆகிய படங்களின் படப்பிடிப்பு என தொடர்ந்து படப்பிடிப்பு வேலைகளிலும் மிகவும் பிசியாக இருந்து வந்த நிலையில் மறுபடியும் இவருக்கு உடல்நிலை பலவீனமாகி உள்ளது. எனவே இதன் காரணமாக மீண்டும் சமந்தா மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

எனவே சமந்தாவிற்கு ஹைபர்பேரிக் ஆக்சிஜன் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை வீக்கத்தை குறைக்கவும், நோய் தொற்றுகளை குணப்படுத்தவும், சேதம் அடைந்த திசுக்களை சரி செய்யவும் உதவி செய்யும். எனவே விரைவில் இந்த சிகிச்சையின் மூலம் நோயிலிருந்து குணமாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சமந்தாவிற்கு ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டுள்ளது எனவே அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா சோசியல் மீடியாவில் வெளியிட இதனைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சமந்தா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அப்பொழுது தெலுங்கு ரசிகர் ஒருவர் தன்னுடைய வீட்டிலேயே சமந்தாவிற்கு கோவில் கட்டி அசத்தியனார்.

samantha
samantha

அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் பலரும் அந்த ரசிகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இவ்வாறு குஷ்பூ, நயன்தாரா போன்ற கோவில் கட்டிய நடிகைகளின் லிஸ்டில் சமந்தாவும் இணைந்து இருப்பது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவ்வாறு இப்படிப்பட்ட நிலையில் விரைவில் சமந்தா பூர்ண குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் கடவுளை தரிசனம் செய்து வருகின்றனர்.

Leave a Comment