இனி அந்த மாதிரி கதாபாத்திரத்திலும் நடிப்பேன் சமந்தா அதிரடி.! ஆனா அது உங்களுக்கு பொருந்தாதே

தமிழ்,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் சினிமாவிற்கு பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற சினிமாவின் புகழின் உச்சத்தில் இருந்து வரும் படம் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்தவகையில் தமிழில் எப்படி பிரபலமடைந்து உள்ளாரோ அதேபோல்  தெலுங்கிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா இரண்டு வருடங்களுக்கு முன்பே தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா மகனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பொதுவாக திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள் அப்படி நடித்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அதோடு முக்கியமாக சொல்லப்போனால் திருமணத்திற்குப் பிறகுதான் இவர் கவர்ச்சியில் ஆர்வம் காட்டுகிறார் ஏனென்றால் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் அப்படி.

இவ்வாறு திரைப் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்பொழுது நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். ஆம், அந்த வகையில் முதன் முறையாக தி பேமிலிமேன் 2 என்ற வெப் சீரியலில் பயங்கரவாதியின் மகளாக நடித்துள்ளார்.

இது குறித்து சமந்தாவிடம் கேட்கும்பொழுது இதுவரையிலும் நான் ஹீரோயினாக மட்டும்தான் நடித்துள்ளேன் முதன்முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் நல்ல அனுபவம் கிடைத்தது. ரசிகர்களும் இதனை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த வெப் சீரியல் ஜூன் 11ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. சமந்தா சொல்லுவது போல் இதுதான் நெகட்டிவாக நடித்த முதல் வெப் சீரியல் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Leave a Comment