சமந்தாவா இது .? மகா சிவராத்திரியை முன்னிட்டு எப்படி மாறி இருக்கிறார் பாருங்கள் .. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பார்க்கப்படுபவர் சமந்தா. முதலில் இவர் பாணாகாத்தடி படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு இவர் டாப் நடிகர்களுடன் அடுத்தடுத்து கைகோர்த்து தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார்.

அதன் விளைவாக பிறமொழி பக்கங்களிலும் வாய்ப்புகள் குவிந்தன குறிப்பாக தெலுங்கில் தொடர்ந்து படம் பண்ணிவந்தார். அப்பொழுது நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா உடன் நெருக்கம் ஏற்பட அது பின் காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. நான்கு வருடங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த இந்த ஜோடி திடீரென சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தது.

அதன் பிறகு சினிமா தான் தன்னுடைய வாழ்க்கை எனக்கருதி கொண்ட சமந்தா தொடர்ந்து சோலோ படங்களில் அதிகம் நடித்தார் மேலும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க சமூக வலைதள பக்கங்களில் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு ஓடினார்  ஆனால் பிரச்சனை மட்டும் இவரை விடாமல் துரத்தியது.

இந்த நேரத்தில் தான் அரிய வகை நோய் ஒன்று சமந்தாவைத் தாக்க மருத்துவமனையே கதியென கடந்தார் ஒரு வழியாக அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இவர் உடல் சரியானதற்கு காரணம் கடவுளின் ஆசிர்வாதம் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை எனக் கூறினார்.

தொடர்ந்து சமந்தா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார் அதன்படி நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில்  “ஓம் நமச்சிவாய சிவபெருமானின் அருள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கட்டும் என குறிப்பிட்டு தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் சமந்தா பக்தி பழமாகவே மாறி இருக்கிறார்.  இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samantha
samantha

Leave a Comment