சமந்தாவைப் பற்றி பேச விருப்பமில்லை எனக் கூறிய நடிகர் நாக சைதன்யா.!

பொதுவாக சினிமா என்றாலே ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவருடன் தான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருவரும் முழு சமூகத்துடன் திருமணம் செய்து கொண்ட பிறகு சில நாட்கள் கழித்து இருந்து பிடித்தால் அவர்களுடன் வாழலாம் இல்லையென்றால் விவாகரத்து செய்து கொள்ளலாம். அந்த வகையில் இவ்வாறு காலம் காலமாக நடந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்த நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இது கோலிவுட் வட்டாரங்களில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்கள் எந்த விஷயத்திற்காக விவாகரத்து செய்து கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரியாது. நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் ‘காபி வித் கரண்’ சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சமந்தாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் திருமணத்தைப் பற்றி பெரிதாக கேள்விகள் கேட்கப்படவில்லை ஆனால் நடிகை சமந்தா குழப்பமான காலகட்டத்தில் இருந்து தற்போது வெளிவந்து விட்டேன் எனக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சமீப டாக் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாக சைதன்யா இவர் அமீர்கானுடன் இணைந்து நடிக்கவுள்ள ‘லால்சிங் சத்தா’ திரைப்படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை கூறினார். இப்படிப்பட்ட நிலையில் அவரிடம் நடிகை சமந்தாவை பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்காக நாங்கள் இருவரும் என்ன சொல்ல விரும்புகிறோமோ அது குறித்து இருவருமே அறிக்கை வெளியிட்டு விட்டோம், இப்பொழுது இருவருமே அவரவர்கள் பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம். எனவே மீண்டும் நடந்த பழைய வாழ்க்கையை பற்றி பேசி தேவையில்லாத விமர்சனங்களை சந்திக்க விரும்பவில்லை. அதோடு தங்களது கடந்த கால வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பற்றி இந்த உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சமந்தா பற்றி கேட்ட கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் நாகை சைதன்யா.

Leave a Comment