3 வருடமாக உருகி உருகி காதலித்தேன் ஆனால் பிரேக்கப் ஆகிவிட்டது.! சாக்ஷி அகர்வால் குமுறல்.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முதன்முதலில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து யோகன், ஆதித்யன், காலா, விசுவாசம், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் இவருக்கு நடிகையாக நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை, பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு  திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளத்தை அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வரும் இவர் சமீபகாலமாக கவர்ச்சி கடந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில் சாக்ஷி அகர்வால் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் சமுத்திரகனி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடித்து வருகிறார், மேலும் சமீபத்தில் சாக்ஷி அகர்வால் பிரபல இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனது காதல் அனுபவங்களைப் பற்றி பேசியுள்ளார்.

sakshi-agarwal
sakshi-agarwal

அதில் அவர் கூறியதாவது நான் கல்லூரி படிக்கும் பருவத்தில் தன்னுடைய சீனியர் ஒருவரை மூன்று வருடமாக உருகி உருகி காதலித்து வந்ததாகவும் ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் செல்லம் அவன் போனா என்ன நான் உன்னை காதலிக்கிறேன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment