என்னை மம்முட்டி காலி செய்ய பார்த்தாரு.! உண்மையை உடைத்த ஷகிலா..

80,90 காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை ஷகிலா. இவர் சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தொடர்ந்த ஏராளமான சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது மற்றும் பிரபலங்களை பேட்டி எடுப்பது என மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது இவர் குறித்த சில தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை ஷகிலா தமிழ், மலையாளம் என பல மொழிகளிலும் பணியாற்றி இருக்கும் நிலையில் சமீப காலங்களாக சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசி வருகிறார்.

அந்த வகையில் சமீப பேட்டியில் ஷகிலாவாக என்னை பார்த்ததுக்கும், ஷகிலா அம்மாவா இப்போ பார்க்கறதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு எனக்கு இப்போ இருக்கிற சூழல்தான் பிடித்திருக்கிறது. என்னை யாராவது ஆன்ட்டி என்று அழைத்தால் அவர்களிடம் அம்மா என்று அழையுங்கள் என்று நானே கூறுகிறேன். அந்த வார்த்தை என்னை பொறுப்பாக மாற்றுகிறது.

கேரளாவில் என்னுடைய படங்கள் வெளியானதால் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது. எனது படங்களில் பிட்டு போட்டு ஒட்டி ரிலீஸ் பண்றாங்க என்பதை கேட்ட பொழுது என்னை மோசம் பண்ணிட்டாங்க என்று தான் தோன்றியது. சென்சார் முடிந்த படங்களையே இப்படி செய்கிறார்கள் 23 படங்களுக்கு சென்சார் கொடுக்காமல் வைத்திருந்தார்கள் என் படத்தை எடுப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் தான் செலவாகும் ஆனால் அந்த செலவுக்கு பலரும் கடன் வாங்கி தான் படத்தை எடுப்பார்ங்கள்.

அப்படி இருக்கும் போது சென்சார் கொடுக்காமல் தடுத்து தயாரிப்பாளர்களை சிரமப்படுத்தினார் எனக்கு இதுயெல்லாம் கோபம் ஏற்படுத்தியது இது தவிர 21 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி இருந்தேன் அதன்பின் 2001இல் இனி இது போன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என என் வீட்டு மாடியில் வைத்து பேட்டி கொடுத்துவிட்டு அட்வான்ஸ்சை திருப்பி கொடுத்து விட்டேன் 22 வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் பலரும் என்னை அதே ஷகிலாவாகத் தான் பார்க்கிறார்கள்.

நான் மோகன்லால் சார் ரசிகை மம்முட்டி மேல எனக்கு எந்த கோபமும் இல்லை ஆனால் அவர் தான் என் படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்தார் இது கூட நான் கேள்விப்பட்டது தான். ஆனால் மம்முட்டி ஒரு கட்டத்தில் கோவில் விழாவுக்கு என்னை அழைப்பு விடுக்க மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கேள்விப்பட்டேன். அவரின் கோபம் நியாயமானது தான் அவர்கள் ஐந்து கோடி செலவழித்த படம் எடுக்கிறார்கள்.

நாங்கள் பத்து லட்சத்தில் படம் எடுக்கிறோம் 10 லட்சம் ரூபாய் படம் ரூபாய் 4 கோடி பணத்தை காலி செய்தால் கோபம் தான் வர செய்யும் அப்படித்தான் என் மீது வருத்தம் இருந்திருக்கும் அவர்கள் என்னை தடை செய்ய நினைத்தபோது நானே என் நடிப்பை தடை செய்து விட்டேன் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம் என்னுடைய கேரியரில் எல்லாமே அழகான தருணங்கள் என்னுடைய நடிப்பால் மற்றவர்களுக்கு பாதித்ததால் மட்டுமே நான் வருந்த வேண்டும் எனக்கு கிடைத்ததை நான் செய்த என ஷகிலா பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment