சூட்டிங் ஸ்பாட்டில் கிராமத்துக் குழந்தைகளுக்கு மெஹந்தி வைத்து அழகு பார்க்கும் நடிகை சாய் பல்லவி.!! வைரலாகும் புகைப்படம்.

actress saipallavi put mehandhi to kids at shouting spot photo:நடிகை சாய் பல்லவி பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், மலையாளம் போன்ற பல மொழியலும் பிரபலமடைந்தார். இந்த திரைப்படத்தில் இவர் நடித்த மலர் டீச்சர் என்கின்ற கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்தது. அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் அவருக்கு ரசிகர் பட்டாளம் குவிந்தது.

தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற திரைப் படங்களில் முன்னணி நடிகையாக நடித்து கொண்டிருக்கிறார்.மேலும் இவர் தற்போது தெலுங்கில் நாக சைதன்யா உடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து தல அஜித்தின் வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி அவர்களுக்கு லக்ஷ்மி மேனன் நடித்த  தங்கை கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தற்போது கிராமத்து பகுதியில் நாக சைதன்யாவுடன் நடிக்கும் லவ் ஸ்டோரி திரைப்படத்தின் சூட்டிங் போய்க்கொண்டு உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சிறு குழந்தைகளுக்கு நடிகை சாய் பல்லவி அவர்கள் மெஹந்தி வைத்துவிடும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.

saipallavi-actress
saipallavi-actress

Leave a Comment