ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன்!! வைரலாகும் புகைப்படம்..

actress saipallavi and anupama parameswaran after 5 years they join together photo: 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்கள் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின். இந்த மூன்று நடிகைகளும் நிவின் பாலிக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடித்து தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

மலையாளத்தில் வெளியான இந்த பிரேமம் திரைப்படத்திற்கு தமிழில் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. இந்தத் திரைப்படத்தில் நிவின் பாலியை பார்த்து அவர் போலவே பல ரசிகர்கள் தாடி, மீசை வைத்திருந்தார்கள். அதுபோலவே நடிகை சாய் பல்லவியயை பார்த்து டீச்சர்னா இப்படித்தான் இருக்கணும்னு என, புடவை கட்ட ஆரம்பித்தனர் இவர்கள் இருவருமே மிகப்பெரிய அளவில் பிரபலமானார்கள்.

பள்ளி பருவத்தில் ஹீரோயினாக வரும் அனுபமா பரமேசுவரன் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார். அதுபோல கிளைமாக்ஸ்ஸில்  நிவின் பாலிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருப்பார்.

எனினும் இந்த ஒரு படத்தில் அறிமுகமாகி நடித்ததன்மூலம் தற்போது மூன்று நடிகைகளுமே தமிழ் மட்டுமல்லாது பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபமா பரமேஸ்வரனும் சாய்பல்லவியும் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணைய தளத்தில் பதிவிட்டு மேரி மற்றும் மலர் டீச்சரை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என ரசிகர்களை கேட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் திக்குமுக்காடி உள்ளனர்.இதோ அந்த புகைப்படம்.

anupama-
anupama-
anupama546-1603093036
anupama546-1603093036

Leave a Comment