ப்ரியா பவானி ஷங்கருக்கு இணையாக பட வாய்ப்பை தட்டி செல்லும் சீரியல் நடிகை.!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்து தற்பொழுது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவரை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து மற்றொரு நடிகையையும் இவர் அளவிற்கு பல படவாய்ப்புகளை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் கேங்க் ஆஃப் மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பிரியங்கா ரூத். இவர் இத்திரைப்படத்தின் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இத்திரைப்படத்தில் பிறகு சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா சீரியலில் நித்தியா ரோலில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

தற்போது இவருக்கு தான் பல திரைப்படங்களில் நடிக்க வரிசையாக வாய்ப்பு கிடைத்து வருகிறது. இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் அதிக ஆர்வம் உடையவர். அந்த வகையில் மெட்ரோ,எனக்கு வாய்த அடிமைகள் இந்த இரண்டு திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இவர் பயம் அறியாமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அதன்பிறகு இவர் தமிழையும் தாண்டி தெலுங்கிலும் in the name of god என்ற வெப் சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

priya ruth
priyanga ruth

இதனைத்தொடர்ந்து பார்த்திபன் மற்றும் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாகியுள்ள இரவில் நிழல் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதன்பிறகு பெயரிடாத பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறாராம். இவ்வாறு இவர் பெரிதாக பந்தா பண்ணாமல் மிகவும் அமைதியாக தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

Leave a Comment