சூர்யா வீட்டிற்கு ரகசியமாக அழைத்து வரப்பட்ட நடிகை சாய் பல்லவி – சரியான நேரம் பார்த்து நடுங்க விட்ட ஜோதிகா.! என்ன நடந்தது தெரியுமா..

பிரேமம் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் சாய் பல்லவி. இந்தப் படத்திற்கு பிறகு மலையாளத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ ஆனால் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

இதனால் நடிகை சாய் பல்லவியின் சினிமா மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. நடிகை சாய் பல்லவி ஷ்யாம் சிங்கா ராய்,  விராட பருவம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்பொழுது கார்கி என்னும் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க நீதி போராட்ட கதையாக உருவாகி உள்ளது.

நிச்சயம் ரசிகர்களையும் தாண்டி மக்களை இந்த படம் கவர்ந்து இழுக்கும் என தெரிய வருகிறது இந்த படம் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. படம் வெளி வருவதற்கு முன்பாக படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க கார்கி படத்தின் போஸ்ட் பிரமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார்.

சாய் பல்லவி அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது படம் குறித்து சில விஷயங்களை பேசிவிட்டு சென்றார் பின் திரும்பி வந்து நான் ரொம்ப மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சூர்யா பற்றி பேசாமல் போய்விட்டேன் என கூறினார் அப்பொழுது அவர் சொன்னது இந்த படத்திற்கு சூர்யா மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார்.

ஒரு நாள் ஒரு சின்ன பிரஸ் மீட்டுக்கு வாங்கன்னு ஒரு இடத்திற்கு என்னை கூட்டிகிட்டு போனாங்க ஆனால் அது சூர்யாவின் வீடு என்று எனக்கு தெரியவில்லை பின்னால் ஒளிந்திருந்த ஜோதிகா எனக்கு சப்ரைஸ் கொடுத்தார். அவர்களைப் பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டேன். அவர்களுக்கு நன்றி கூட நான் சொல்லல ரொம்ப போட்டோக்களில் கூட சிரிச்சேன்னு கூட தெரியல.. சூர்யாவை பற்றி புகழ்ந்து பேசி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.

Leave a Comment