நடிகை ராய் லட்சுமியின் வீடியோ பதிவினைப் பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்.!!

actress Roy Lakshmi instagram video : உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் இந்தியாவில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து  மக்கள் வெளிமாநிலங்களில் இடம்பெயர்ந்து வேலைக்கு சென்றிருந்தார்கள் தங்களது மாநிலங்களுக்கு நடந்தே வருகின்றனர். அப்படி வரும்போது இடையில் அவர்கள் பசியின் காரணமாக இறக்க நேர்படுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொண்டு வருவதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். மேலும் சிலர் உடல்நிலை சரியில்லாமல் இறக்கின்றனர். சிலர் இடையில் ஏற்படும் வாகன விபத்தினால் இறக்கின்றனர். இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தினால் கூலி தொழிலாளிகள், வெளிமாநில தொழிலாளர்கள், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பதிவிட்ட அந்த வீடியோ பதிவினை பார்த்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பதிவில் “கடவுளே இந்த உலகத்தை காப்பாற்றுங்கள்..! இதையெல்லாம் இனி எங்களால் பார்க்க முடியாது..! உங்களால் முடிந்தவரை மக்களுக்கு உதவவும், உயிரைக் காப்பாற்றவும் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள். கடினமான நேரங்கள் விரைவில் கடந்து செல்லும். நல்ல நாட்கள் வரும் என்று நம்புகிறோம், வலுவாக இருங்கள், கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்”, என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment