ரகுவரன் சினிமாவில் மட்டும் வில்லன் கிடையாது.! நிஜத்திலும் கிட்டத்திட்ட அதே மாதிரி தான்.? உண்மையை உடைக்கும் நடிகை ரோகிணி.!

சினிமா உலகில் முரட்டுத்தனமான உடம்பை வைத்திருப்பவர் தான் வில்லன் என நாம் நினைத்துக் கொண்டிருந்தோம் அதை உடைத்து எறிந்தவர் நடிகர் ரகுவரன். ஆள் பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தாலும் அவருடைய குரலில் கர்சிக்கும்படி இருந்ததால் வில்லன் ரோல் இவருக்கு பயங்கரமாக பொருந்தியது குறிப்பாக ரஜினி போன்ற டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து அசத்தியவர்.

சினிமா உலகில் எப்படி சிவாஜி கமல் போன்றவர்கள் சிறந்த நடிகர்கள் என்று சொல்கிறோமோ அந்த அளவிற்கு ரகுவரனும் வில்லன் கதாபாத்திரத்தில் அவரை அடிச்சுக்க ஆளே இல்லை அந்த அளவிற்கு திறமை வாய்ந்தவர் இவர் ரோகினியை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது ஆனால் அதன் பின் ஆறு வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக பிரிந்தனர்.

ரகுவரன் 2008 ஆம் ஆண்டு உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார் அப்பொழுது ரோகினி ரகுவரணை பற்றிய சில உருக்கமான பதிவுகளை போட்டு இருந்தார். இப்பொழுது கூட பெண்களுக்கு நடக்கும் எதிரான கொடுமைகள் மற்றும் சமூகப் பிரச்சினை பற்றி பேசி தான் வருகிறார். பெண் குழந்தைகள் வளர்க்கும் போது கணவர் வீட்டுக்கு சென்றாள் இந்த வேலைகள் செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்து வளர்க்கப்படுகிறது.

அந்த பெண்களுக்கான சுதந்திரம் அப்பொழுதே பறிக்கப்படுகிறது அதுவும் புகுந்த வீட்டில் நாலு சுவருக்குள் பல போராட்டங்களுக்குப் பிறகு அந்த பெண் ஏதாவது ஒரு வார்த்தை பேசி விட்டால் அவளுடைய நிலைமை எவ்வளவு தான் அதன் பின் அந்த பெண்ணின் கேரக்டரை தப்பாக பேசும் உலகம் இது மேலும் 90% பெண்கள் இதுபோன்ற கொடுமைகளை அனுபவிக்கின்றனர் என கூறி பேசினார். அவர் சொல்வது போலவே தான் நானும் சில கொடுமைகளை அனுபவித்து இதற்கு மேல் முடியாது என வந்து விட்டேன் என கூறினார்.

ரகுவரனைப் பற்றி அவ்வாறு சொன்னது ரகுவரன் அதிகமாக மது அருந்தக்கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் மேலும் தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் தத்துவமாக இருக்க வேண்டும் என்பதால் அதற்காக பல விஷயங்களை மனகெட்டு செய்யும் ரகுவரன் வீட்டில் அதே கதாபாத்திரம் போன்று நடந்து கொள்வாராம் பெரும்பாலும் ரகுவரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அதுபோன்று வீட்டிலும் நடந்து கொள்வதால் மிகப் பெரிய பிரச்சனைகள் எழுந்துள்ளது ரகுவரன் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினராலும் பாதிக்கப்பட்டதாக ரோகிணி பேசினார்.

Leave a Comment