சினிமா நடிகைகள் ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவும், அழகாகவும் இருந்தாலே போதும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பட வாய்ப்பை கொட்டி கொடுப்பார்கள் அதிலும் ஒரு சில நடிகைகளின் முகபாவனைகள் மற்றும் பேச்சு அழகாக இருந்தால் அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் அப்படித்தான் தற்போது மக்களின் ஃபேவரட் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும் தற்போது தென்னிந்திய திரை உலகம் முழுவதும் இவரது பெயர் ரீச் ஆகியுள்ளது அதற்கு காரணம் இவரது கியூட்டான முக பாவனைகள் மற்றும் அழகே காரணம் என கூறப்படுகிறது. கன்னட சினிமாவில் “கிரிக் பார்ட்டி” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன்பின் அதிக பட வாய்ப்புகள் கொடுத்து தனது செல்ல ராணியாக வைத்து அழகு பார்க்கிறது தெலுங்கு சினிமா.
தெலுங்கில் இவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் தோல்வியை சந்திக்காமல் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்றுள்ளன அதிலும் குறிப்பாக கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்று தந்தன மற்ற படங்கள் சுமாரான வெற்றியை பெற்றாலும் நல்ல இடத்தை தற்போது அங்கு நிலைநாட்டி உள்ளார்.
செல்லத்துக்கு தற்போது தமிழிலும் நடிக்க ஆசை வந்துள்ளது அந்தவகையில் கார்த்தியுடன் இணைந்து “சுல்தான்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் தமிழில் தற்போது ஏராளமான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
மேலும் தென்னிந்திய திரையுலகில் தனது திறமையை நிரூபிக்க ரசிகர்கள் பட்டாளமே தன்னை வேற லெவலுக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதை உணர்ந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா தற்போது தனது வளைவு, நெளிவான உடல் அழகை காட்ட உடலுகேத்த டைட்டான உடை போட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் இவர் தனது அழகை காட்டிய கியூட் புகைப்படம் இதோ.