ரசிகர்களின் கனவு நாயகி நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இருக்கும் 3 பெரிய ஆசைகள் – என்னென்ன தெரியுமா.?

வளர்ந்து வரும் நடிகையான ராஷ்மிகா மந்தனா. தமிழில் முதலில் நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் ஏற்கனவே தெலுங்கில் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது இப்பொழுது கூட இவர் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் தளபதி விஜய் 66 திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து வருகிறார்.

வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன், குடும்ப செண்டிமெண்ட், காமெடி என அனைத்தும் கலந்து உருவாகுவதால் இந்த படம் குழந்தைகள் தொடங்கி முதியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் படி இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் தொடங்கி படத்தில் நடித்து வரும் நடிகர்கள் வரை பலரும் சொல்லி வருகின்றனர்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பிலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி கொண்டு தான் இருக்கிறது. இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு  போய்க்கொண்டிருக்கிறது. விஜயின் வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு மூன்று ஆசை இருக்கிறதாம் அது என்ன என்பது அவரே ஓபன் ஆக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதாவது ஒரு சரித்திர படம், விளையாட்டை மையப்படுத்திய ஒரு படம் மற்றும் வாழ்க்கை படத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றவும் அவர் ரெடியாக இருக்கிறார். தனக்கு பிடித்த மாதிரி இந்த மூன்று கதைகளும் எப்பொழுது கிடைத்தாலும் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version