பாவாடையை தூக்கி சொருகிக்கொண்டு வயக்காட்டில் இறங்கி டிராக்டர் ஓட்டும் ராஷ்மிகா மந்தனா!!. வைரலாகும் வீடியோ..

தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் எக்ஸ்பிரஷன் குயின்னாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கு ராஷ்மிகா தான்  க்ரஷ் என்று சொல்லலாம்.

இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்திருந்த கீதகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்ததால் ரசிகர்கள் இவர் எப்போது தமிழில் நடிப்பார் என்று ஏக்கத்தில் இருந்து வந்தார்கள் அந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில் தற்பொழுது ராஷ்மிகா மந்தனா கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இவர் தமிழிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது ஒருபுறமிருக்க இவரும் மற்ற நடிகைகளைப் போலவே இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராமில் வயலில் டிராக்டர் எந்திரத்தை கையில் பிடித்துக்கொண்டு உழுகிறார். சேற்றில்  நின்றபடியே ஆடையை தூக்கி சொருகி இடுப்பில் துண்டை கட்டுகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment