ஆண் தேவதை,ஜோக்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் சொல்லும் அளவிற்கு திரைப் படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேபோல் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடையவில்லை என்பதால் கவர்ச்சியில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார்.அந்த வகையில் மொட்டை மாடியில் இவர் தனது இடுப்பு அழகு தெரியும் படி எடுத்த ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒரே இரவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இந்த புகைப்படத்திற்கு பிறகு இவரை இடுப்பழகி ஜோதிகாவுக்கு பிறகு ரம்யா பாண்டியன் தான் என்று கூற ஆரம்பித்தார்கள். இந்நிலையில் இவர் சின்னத்திரையில் பணியாற்ற ஆரம்பித்தார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
அதன்பிறகு இவர் திரைப் படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் இவர் என்ன நடந்தாலும் ஒரு சிறு புன்னகை இவரின் முகத்தில் இருந்ததால் ரசிகர்கள் இவரை விஷ பாட்டில் உள்ளிட்ட பல பட்டப் பெயர்களை வைத்து கலாய்த்து வந்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் ஒரு குழந்தை தூக்கி வைத்து கொஞ்சுவது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த குழந்தையாக நான் இருக்க கூடாதா என்று கமெண்டு செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.