ரசிகர்களை மிரட்டும் அளவிற்கு வெளிவந்த ரம்யா பாண்டியனின் அடுத்த பட டைட்டில்..! டைட்டிலே சும்மா அல்லுவிடுதே..!

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியாக இருக்கும் ஒரு நடிகை என்றால் அது ரம்யா பாண்டியன் இவர் அருண்பாண்டியனின் அண்ணன் மகள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் திரைப்படங்களின் மூலம் தான் தன்னுடைய பயணத்தை தொடர ஆரம்பித்தார்.

அந்தவகையில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக திரையுலகில் அறிமுகமானார் இத்திரைப்படத்தை தொடர்ந்து ஜோக்கர் என்ற திரைப் படத்தில் கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவ்வாறு இவருடைய நடிப்பை பார்த்த நமது இயக்குனர் சமுத்திரகனி அவர்கள் ரம்யா பாண்டியனை வைத்து ஆண்தேவதை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இத்திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடுவராக இருந்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் நாளில் கலந்து கொண்ட தன்னுடைய மொத்த மரியாதையும் இழந்து விட்டார்.

என்னதான் ரசிகர்கள் முகம் சுழித்தாலும் ஒருவரும் இவரை மறக்கவே இல்லை அந்த வகையில் தற்போது சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் திரைப்படத்தில் இவர் கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் அறிமுக இயக்குனர் அருண் அஜித் இயக்க உள்ளார் மேலும் இத்திரைப்படத்திற்கு இடும்பன்காரி  என பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது மிகவும் விறுவிறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல் துப்பறியும் திரைப்படமாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் நீயா நானா தொகுப்பாளர் கோபிநாத் அவர்களும் நடிக்க உள்ளார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.

ramya pandiyan-01
ramya pandiyan-01
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment