அரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ.!! ரம்யா பாண்டியன் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படத்தை பார்த்து அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ என வர்ணித்து வருகிறார்கள்.

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர். அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் அவருக்கு பிரபலத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

அதன் பிறகு தொடர்ந்து சின்னத்திரை தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். இந்த நிலையில் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என பிஸியாக இருந்த ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அதன் பிறகு இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது. ஆனால் இதற்கெல்லாம் முன்னாடி ரம்யா பாண்டியனை பலருக்கு தெரியாமல் இருந்திருக்கும்.  மொட்டை மாடியில் இவர் நடத்திய போட்டோ ஷூட் இவரை பிரபலமாக மாற்றியது. அந்த போட்டோ ஷுட்டை இதுவரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்பொழுதும் ரம்யா பாண்டியன் அவர்களை இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன் என்றுதான் அழைக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் ஆரியை பிடிக்காது என கூறி புறம் பேசினார் அதனால் சமூக வலைத்தளத்தில் விமர்சனத்திற்கு ஆளானார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் ரம்யா பாண்டியன் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடும் ரம்யா பாண்டியன் முஸ்லிம்  கெட்டப்பில் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ என வர்ணித்து வருகிறார்கள்.

 

ramyapandiyanaa
ramyapandiyanaa
ramyapandiyans
ramyapandiyans

Leave a Comment