வீங்கி போன முகம் ரைசா எடுத்த அதிரடி முடிவு.! இத்தன கோடி நஷ்ட ஈடா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் முதலில் மாடலிங்காகத் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இவருக்கு பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியை விட்டு இவர் பாதியிலேயே வெளியேறினாலும் கூட ரசிகர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அனைவருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ராசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தும்,சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியானா புகைப்படங்களை வெளியீடு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஃபேஸ் வாஷ் செய்வதற்காக ஒரு மருத்துவரை அணுகியதாகவும் முகத்தில் ஒரு சிகிச்சை செய்துகொள்ள கூறி மிகவும் வற்புறுத்தியதாகவும் அந்த சிகிச்சை செய்ததால் கண்ணின் கீழ்ப் பகுதியில் பெரியதாக வீங்கி இருந்த புகைப்படத்துடன் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

அதோடு மீண்டும் மறுநாள் மருத்துவரை அணுக சென்றதாகவும் அவருடைய உதவியாளர் அவர் சென்னையில் இல்லை என்று கூறி விட்டதாகவும் ரைசா கூறியிருந்தார். இந்நிலையில் ரைசா அந்த டாக்டருக்கு ஒரு கோடி நஷ்டைடு கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பிவுள்ளாராம்.

Leave a Comment