திருமணத்திற்கு தேதி குறித்த ராய் லட்சுமி.!! மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகை ராய் லட்சுமி தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் எடுத்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர் அதனைத் தொடர்ந்து தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம் தூம், நான் அவன் இல்லை, வாமனன், முத்திரை, ஒன்பதுல குரு, அண்ணனை பெங்களூர் நாட்கள் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சின்ரெல்லா, ஆனந்த பைரவி, கேங்க்ஸ்டர் 21 போன்ற திரைப் படங்களில் தற்போது நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் இவர் அடக்க ஒடுக்கமாக முன்னணி ஹீரோயினாக லக்ஷ்மி ராய் என்ற பெயரில் நடித்து வந்தார்.

படவாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் பின்பு தனது பெயரை அஸ்ட்ராலஜி படி மாத்தி ராய்லட்சுமி என வைத்து கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். மேலும் இவர் தற்போது மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தல தோனியை காதலித்தது அனைவரும் அறிந்ததே. இவருக்கு காதல் கைகூட வில்லை என்றாலும் பெரிதாக சோர்ந்து விடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப்படங்கள் என அனைவருமே எப்போது உங்களுக்கு திருமணம் என தொடர்ந்து கேள்வியை எழுப்பி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் இவர் தற்போது தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி நிச்சயதார்த்தம் என்றும் மாப்பிள்ளை யார் என்பது மட்டும் சஸ்பென்ஸ் எனவும் உள்ளார்.

மேலும் பல காலமாக நிறைய பேர் என்னிடம் எப்போது திருமணம் என்று கேட்டு வருகின்றனர் அதனால்தான் அதை நிவர்த்தி செய்ய முடிவு செய்துள்ளேன். நான் எனது உறவை மறைக்கவில்லை இது மற்றவர்களுக்கு அவசியமில்லாதது என நான் நினைக்கவில்லை.

தனிப்பட்ட விஷயம் என நான் நினைக்கிறேன் எனது வாழ்க்கைத் துணைவரை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறேன் அவரின் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கடந்தவாரம் அழைப்பு விடுத்ததாகவும் எதிர்பாராமல் இது நடக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது குடும்பத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார்.

போன்றவற்றை பதிவிட்டு இறுதியாக கைகளை சுத்தமாக கழுவுங்கள், சனிடைசரை பயன்படுத்துங்கள் என்பதை நினைவுபடுத்தி உள்ளார்.. இந்த பதிவை மற்றவரிடமிருந்து நான் திருடி உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
தற்போது இந்த பதிவு இனையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment