சுஷாந்த் தற்கொலை விவகாரத்தினால் மாட்டிய நடிகை ரகுல் பிரித் சிங்.! எப்ப வேன்னும் முன்னாலும் கைதாகளாம்.?

இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் தற்போது கொடி கட்டி பறந்து வருபவர் நடிகை ரகுல் பிரித் சிங். இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து தான் அவருக்கு சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.  இவர் ஹிந்தி, தெலுங்கு போன்றவற்றில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையறத் தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே போன்ற பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் தற்பொழுது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இருப்பினும் தற்போது இவரது கையில் ஒரு சில படமே கைவசம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் தற்போது வெப்சீரிஸ் சென்று தனது நடிப்பு திறமையை வெளிக் காட்டி சிறப்பாக வலம் வரலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம் ஆனால் அதற்கு முன்பாகவே தற்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லவேண்டிய சூழ்நிலை இருக்கும் என்பது தெரிய வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் செய்தி  இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசார் மற்றும் சிபிஐ கடும் சோதனை நடத்தினர். அதன் விளைவாக அவரது காதலி ரியா என்பவர் மீது போலீஸ்சார் விசாரணை ஆரம்பித்தனர்.

அப்பொழுது அவர் போதை மருந்து எடுத்துக் கொண்டது தெரியவந்தது. இதற்காக அவரை சிறையில் அடைத்து விசாரித்து வந்த நிலையில் இவருடன் யார் யார் பயன்படுத்துகின்றனர் என்ற செய்தியும் சமீபத்தில் வெளிவந்து மேலும்  சிபிஐ விசாரித்து வருகின்றனர்.

அதில் ஒருவராக ரகுல் ப்ரீத் சிங் மாட்ட  அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது. இவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலி ரியாவின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் எந்த நேரத்திலும் சிபியை நடிகை ராகுல் ப்ரீத் சிங்கை கைது செய்யலாம் என தெரியவருகிறது.

Leave a Comment