எனக்கு பிடித்த சீரியல் இதுதான் எனக் கூறிய நடிகை ராதிகா.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

பொதுவாக ஏராளமான நடிகைகள் சினிமாவில் திரைப்படங்களில் நடித்துவிட்டு ஒரு கட்டத்திற்கு பிறகு சீரியல்கள் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அந்த வகையில் பல ஆண்டு காலங்களாக சின்னத்திரையிலும்,வெள்ளி திரையிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகை ராதிகா.

இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இவர் பெண்,தாமரை, அண்ணாமலை, செல்லமே, சித்தி வாணி ராணி என ஏராளமான சீரியல் நடித்த வந்தார்.மேலும் சன் டிவியில் கடைசியாக சித்தி 2 சீரியலில் நடித்திருந்தார் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இந்த சீரியலில் இருந்து  தற்பொழுது வரையிலும் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்து வருகிறார் மேலும் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களை நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் சேதுபதி, விஜய்,தனுஷ் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் நீங்கள் நடித்ததில்லையே எந்த நடிகருக்கு அம்மாவாக நடித்தது கம்ஃபோட்டபிலாக இருந்தது என கேட்டார்கள் அதற்கு ராதிகா நான் விஜய், விஜய் சேதுபதி, தனுஷனை அனைவருக்கும் அம்மாவாக நடித்த விட்டேன் எனக்கு எல்லா நடிகர்களும் ஒன்னு தான்.

ஆனால் அஜித்துடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை, நான் அம்மாவாக நடித்தால் அவர்களுக்கு பிடித்த வகையில் நான் இருக்கேனா என்பதை தான் பார்க்க வேண்டும் என கூறி இருந்தார். மேலும் இதனைத் தொடர்ந்து நீங்கள் நடித்த சீரியல்களிலேயே உங்களுக்கு பிடித்த சீரியல் எது என கேட்டதற்கு சித்தி என கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் சித்தி சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment