சமூக வலைத்தளத்தில் நடந்த கேவலமான செயலால் கோபமான நடிகை ராதிகா..! ஆவேசத்தில் வெளியிட்ட வைரலான ட்விட்..!

actress radhika latest twit viral : தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயரில் போலியான கணக்கு உருவாகி வருகிறது. இவ்வாறு போலியான கணக்கை உருவாக்கிய நபர்களை பிரபலங்களும் இணையத்தில் மிக கடுமையாக திட்டி தீர்த்து வருகிறார்கள்.

பொதுவாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு பிரபலங்களும் இருந்து வருகிறார்கள் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தங்களுடைய ரசிகர்களிடம் நேரடியாக உரையாடுவதற்கும் தங்களின் படத்தைப் பற்றிய அப்டேட்களை வெளியிடுவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் இதுவரை சமூக வலைதள பக்கத்தில் கணக்கு வைத்துக் கொள்ளாமலேயே இருந்து வருகிறார்கள்.  அதற்கு எடுத்துக்காட்டாக தல அஜித் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் ஆகிய இருவரையும் சொல்லலாம்.

ஆனால் சமீபத்தில் கூட  மணிரத்னம் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளன்று சமூக வலைதளப் பக்கத்தில் டுவிட்டர் கணக்கு உருவாக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தன.  இவ்வாறு வெளிவந்த தகவலை பார்த்து ரசிகர்கள் பலரும் அந்த பக்கத்தை லைக் செய்ய ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு வெளிவந்த செய்தியை பார்த்த சுகாசினி அவர் எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் இணையவில்லை அது ஒரு போலியான கணக்கு ஆகையால் அதனை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என தெரிவித்திருந்தார்

இதனை பார்த்த நடிகை ராதிகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உலகம் எதை நோக்கி போராடிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட்டு மூளை இல்லாதவர்களும் வேலையற்றவர்களும் முட்டாள்தனமான செயலை செய்து வருகிறார்கள் இவற்றை பார்த்து என்னுடைய நேரத்தையும் சக்தியையும் வீணாக்க நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

rathika

இந்நிலையில் சமீபத்தில் கூட துல்கர் சல்மான் தன்னுடைய பெயரில் சமூக வலைதள பக்கத்தில் போலியான பெயரில் ஒரு கணக்கு உருவாகி இருப்பதை பார்த்து இது போலியான கணக்கு என கூறியிருந்தார்.

Leave a Comment

Exit mobile version