நடிகை பிரியா மணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்.! நெகிச்சியில் உறைந்து போன நடிகை..

நடிகர் ஷாருக்கான் தற்பொழுது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியா மணி, யோகி பாபு உள்ளிட்ட தமிழ் பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். முக்கியமாக பிரியா மணி இந்த படத்திற்கு முன்பே ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியாமணி ஜவான் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஷாருகானுடன் இணைந்து நடித்து வருகிறார். அதாவது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் அவர் ஷாருக்கான் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் ஆனால் ஜவான் திரைப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.

நடிகை பிரியாமணி தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நிலையில் முக்கியமாக கார்த்தியின் அறிமுக படமான பருத்தி வீரனும்னில் அவருக்கு ஜோடியாக நடித்த கலக்கி இருந்த அனைவருடைய கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது மேலும் முத்தழகு என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்த நிலையில் தேசிய விருதையும் பெற்றிருந்தார்.

இவ்வாறு சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் உடன் ஒரு பாடலுக்கு பிரியாமணி நடனமாடி இருந்த நிலையில் ஜவான் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் பங்குபெற்ற பொழுது அவரை ஷாருக்கான் அடையாளம் கண்டு உற்சாகத்துடன் கட்டித் தழுவி கொண்டாராம் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை தொடர்ந்து மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷாருகான் கூறியுள்ளார்.

இது ப்ரியாமணிக்கு மிகுந்த மகழ்ச்சியை கொடுத்ததாகவும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் தன்னை ஷாருக்கான் ஞாபகம் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா மாணி வெப் தொடர்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

Leave a Comment